Friday, 1 July 2022

அவரவரை அவரவரே அறிவார்

 

அவரவரை அவரவரே அறிவார்

சோதனையால் வேதனையோ
வேதனையால் சோதனையோ
காலத்தின் கோலமோ
கேவலத்தின் காலமோ
சாபத்தின் கோபமோ
கோபத்தின் சாபமோ
பிரிந்தத் துயரோ
துயரத்தின் பிரிவோ
வறுமையின் கொடுமையோ
கொடுமையான வறுமையோ
போட்டியால் பொறாமையோ
பொறாமையால் போட்டியோ...

அவரவர் மனதை அவரவரே அறிவார்
அடுத்தவர் மனதை எவரறிவார்?

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment