அவரவரை அவரவரே அறிவார்
சோதனையால் வேதனையோ
வேதனையால் சோதனையோ
காலத்தின் கோலமோ
கேவலத்தின் காலமோ
சாபத்தின் கோபமோ
கோபத்தின் சாபமோ
பிரிந்தத் துயரோ
துயரத்தின் பிரிவோ
வறுமையின் கொடுமையோ
கொடுமையான வறுமையோ
போட்டியால் பொறாமையோ
பொறாமையால் போட்டியோ...
அவரவர் மனதை அவரவரே அறிவார்
அடுத்தவர் மனதை எவரறிவார்?
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment