பொம்மைப் படம்
ஓடா முயலும் ஆடா மயிலும்
பாடா குயிலும் பாடம் பயில வழியேது?
கண்ட முயலுக்கு துள்ளாத வழியேது?
காணும் முயலுக்கு துள்ளும் வழியேது?
வாடாப் பூவில் இருந்திடும் மணமே
வாடியப் பூவில் இறந்திடும் மணமே!
பொம்மையானது படமாகவும் மாறும்
உண்மையானது ஊமையாகவும் மாறும்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment