கிளிகளுக்குள் வந்தக் கிலி
காலோடு பட்டக் காலில் படபடப்பை அறிகின்றேன் கண்ணே!
இயற்கையின் இயல்பான படைப்பை இழக்கின்றோம் கண்ணா!
கத்திச் சண்டை குத்துச் சண்டை
உலகமிது கண்ணே!
கொத்தித் தின்ற கத்தித் தின்ற
காலமெங்கே கண்ணா?
காட்டை இழந்தோம் வீட்டை இழந்தோம் மனிதரால் கண்ணே!
கூண்டோடு அழிந்து கூண்டும் அழிந்து மாண்டிடுவோமோ கண்ணா?
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment