அண்டிமாவெனும் முந்திரிப் பழம்
முந்திரிக்கு என்றும் கொட்டையழகு மந்திரிக்கு இன்றும் சொட்டையழகு முந்திரியெனில் தொண்டையில் கரகரப்பு மந்திரியெனில் தொண்டையே கரகரப்பு
பிரேசிலில் தோன்றியது வரலாற்றுப்படி அதைப் பிற நாட்டுடையது என்பது குளறுபடி புரட்சிகரத்துடன் சிவப்பாய் இருக்கும் மங்களகரத்துடன் மஞ்சளாய் இருக்கும்
அன்றைய சித்தர்கள் பார்வையில் பனம் சீத்தா முந்திரியென தாமசக் கனிகள் இன்றையப் பக்தர்கள் பார்வையில் மா பலா வாழையென சுவைக் கனிகள்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment