தாயும் தாரமும்
தாரத்திற்கு முன் தாயே எல்லாமும் தாய்க்குப் பின் தாரமே எல்லாமும்
பெற்றுக் காத்தத் தாயே எல்லாமும் பேணிக் காக்கும் தாரமே எல்லாமும்
தவழும்போது கை கொடுத்தது தாய் தடுமாறும்போது கை கொடுப்பது தாரம்
சுவையை அறிந்தபோது ஊட்டியது தாய் சுவையை மறந்தபோது ஊட்டுவது தாரம்
தாயை இழந்தால் சோகத்தில் மூழ்கிடும் தாயில்லா மகனின் வாழ்க்கை
தாரத்தை இழந்தால் பரிதாபத்தில் முடிந்திடும் கணவனின் வாழ்க்கை!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment