Tuesday, 8 February 2022

தாயும் தாரமும்

 

தாயும் தாரமும்

தாரத்திற்கு முன் தாயே எல்லாமும்    தாய்க்குப் பின் தாரமே எல்லாமும் 

பெற்றுக் காத்தத் தாயே எல்லாமும்      பேணிக் காக்கும் தாரமே எல்லாமும் 

தவழும்போது கை கொடுத்தது தாய் தடுமாறும்போது கை கொடுப்பது தாரம் 

சுவையை அறிந்தபோது ஊட்டியது தாய் சுவையை மறந்தபோது ஊட்டுவது தாரம்

தாயை இழந்தால் சோகத்தில் மூழ்கிடும் தாயில்லா மகனின் வாழ்க்கை 

தாரத்தை இழந்தால் பரிதாபத்தில் முடிந்திடும் கணவனின் வாழ்க்கை!

தஞ்சை த இராமநாதன் 

 

No comments:

Post a Comment