நன்னீராடல்
உச்சந் தலையில் ஊற்றியத் தண்ணி உள்ளம் குளிருது அதை எண்ணி குளம் இல்லாதக் குடத்தடித் தண்ணி நலம் காக்குமென மனதில் எண்ணி
மலைக்குப் போகும் சாமிக்குத் தண்ணி மலையில் இருக்கும் சாமிக்கும் தண்ணி உடலைச் சுத்தம் பண்ணுதுத் தண்ணி மனதைக் குளிரச் செய்வதும் தண்ணி
வளரும் மகனின் தலைக்குத் தண்ணி வளர்ந்த மகனின் தலைக்கும் தண்ணி பாடமாய் அன்று தலைக்குத் தண்ணி படமாய் இன்று தலைக்குத் தண்ணி!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment