வீர இரத்தம் தமிழனின் இரத்தம்
கணவனை இழந்தக் கைம்பெண் பச்சிளம் பாலகனை அனுப்பினாள்
போர்க்களத்தில் மாண்டான் மகன்
புறமுதுகிட்டு இறந்தானென செய்தி
புறப்பட்டாள் போர்க்களம் நோக்கி
அப்படியா இறந்தான் என் மகன்?
அப்படியென்றால் அறுத்தெறிவேன்
அவனுக்குப் பாலூட்டிய மார்பகத்தை
அங்குமிங்கும் பிணக் குவியல்கள்
மகனைப் புரட்டி நிமிர்த்திப் பார்த்தாள்
முதுகினில் கத்தி முனையைக் கண்டாள்
கட்டி அணைத்துக் கர்ஜித்தாள் வீரத்தாய்
என் மகன் வீரமகன் அவன் தமிழ்மகன்
குலத்தாயின் கண்கள் குளமானது
என் குலத்தின் வீரம் நிலையானது
கோழைக் குலமே முதுகில் குத்தி வாங்குவது!
- தஞ்சை த இராமநாதன்
👌👌👌😥😥😥
ReplyDelete