Thursday, 24 February 2022

அன்புள்ள இல்லம்

 

அன்புள்ள இல்லம்

உள்ளத்தில் அன்பு நிறைந்திருந்தால் இல்லத்தினில் எதிரொலிக்கும்
கன்னத்தில் குழி ஒளிந்திருந்தால் நகைப்பதனில் பிரதிபலிக்கும்

சிரிப்பின் சிறப்போடு நாம் வாழ்ந்தால்
வாழ்க்கை சிறந்திருக்கும்
முடியின் இழப்போடு தலை இருந்தால் வழுக்கை நிறைந்திருக்கும்

அன்புடன் வாழ்க்கை அமைந்ததானால் மங்களம் நிலைத்திருக்கும்
அன்பான உள்ளம் இணைந்ததானால்
ஆனந்தம் திளைத்திருக்கும்!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment