உறவு தரும் பாசமும் பாடமும்
உயிரைக் கொடுத்த பெற்றோரின் உறவு உறவின் முறையில் முதன்மையாகுது உறவோடுப் பிறந்த உடன் பிறப்புகள் காலத்தால் பிரிய வேண்டியதாகுது
விட்டுக் கொடுத்த இளமைக்கால வட்ட உறவுகள் விட்டு விலகிப் போகுது உண்மையான உறவுகள் மட்டும் விட்டு விலகாமல் உறவோடு ஒட்டி வாழுது
உரிமையோடு உறவினர் அன்பை எதிர்ப் பார்த்தால் ஏமாற்றம் உண்டாகுது வறுமையோடு வாழும் உறவினரின் உறவோ முற்றிலும் அறுந்துப் போகுது
வளர்ந்து வாழ்ந்து கடந்து வந்தப் பாதை பாடமானதால் நா வறண்டுப் போகுது நடந்து முடிந்து தளர்ந்துக் கிடக்கையில் கண்ணீர்க் கூட அற்றுப் போகுது!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment