பார்க்கும் தூரத்தில் இருக்கின்றேன்
பார்த்தும் துயரத்தில் இருக்கின்றேன்
சிறுகடலை நீந்தவே முடியாத உனக்கு
பெருங்கடலை நீந்தவா முடியும் உனக்கு?
சிலவற்றை அடைய முடியாத உனக்கு
பலவற்றை அடைய முடியுமா உனக்கு?
என் குறளுக்கு புதுப்புதுத் தெளிவுரை
குளறுபடியான விசித்திரத் தலைமுறை!
அறத்தோடு வாழ்வை நாளும் கடத்து
பொருளற்ற பேச்சை உடனே நிறுத்து
மகிழ்வுடன் உறங்கு நாளும் படுத்து
இறையை உன்னுள் நிலைநிறுத்து!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment