புரியாதப் புத்தகம்
திரும்பத் திரும்பப் படித்தாலும் படித்தது இவருக்கு ஒன்றும் புரியவில்லையோ? திருப்பித் திருப்பிப் படித்தாலும் படித்தப் பக்கம் எதுவென்று புரியவில்லையோ?
யாரோடப் புத்தகம் என்று சுற்று முற்றும் பார்த்தாலும் யாரும் அங்கில்லையோ? புத்தகத்தை எழுதிய புதுமைக் கிறுக்கன் யாரெனத் தெரியவில்லையோ?
நகரப் பேருந்து வரும்வரை நகராமல் உட்கார்ந்ததில் அர்த்தமே இல்லையோ? புரியாதப் புத்தகத்தை அங்கேயே விட்டு மற்றவரும் ஏமாற விரும்பவில்லையோ?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment