Thursday, 27 January 2022

கடலூரில் கட்டிடம் தானாக இடிந்தது

 

கடலூரில் கட்டிடம் தானாக இடிந்தது

இடிய வேண்டும் என்பதற்காகவே கட்டிடம் கட்டம் வைத்து கட்டப்படுகின்றது
இடியும் எனத் தெரிந்தும் கட்டிடங்கள் இடிக்காமல் விடப்படுகின்றது

கட்டிடம் இடிந்து தலை உடைந்து உயிர் பிரிந்தால்தான் நிதி ஒதுக்கப்படுகின்றது
இடிந்தக் கட்டிடம் இருந்த இடத்தில் பேய் இருந்ததாய் ஒதுக்கி வைக்கப்படுகின்றது 

யாராவது இறந்தால்தான் இந்த ஆதாய அரசியலார் அரசியல் செய்ய முடிகின்றது
ஆபத்து பல நடந்தாலும் நடப்பவை நடந்தவையை மறக்க வைத்து விடுகின்றது!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment