கடலூரில் கட்டிடம் தானாக இடிந்தது
இடிய வேண்டும் என்பதற்காகவே கட்டிடம் கட்டம் வைத்து கட்டப்படுகின்றது
இடியும் எனத் தெரிந்தும் கட்டிடங்கள் இடிக்காமல் விடப்படுகின்றது
கட்டிடம் இடிந்து தலை உடைந்து உயிர் பிரிந்தால்தான் நிதி ஒதுக்கப்படுகின்றது
இடிந்தக் கட்டிடம் இருந்த இடத்தில் பேய் இருந்ததாய் ஒதுக்கி வைக்கப்படுகின்றது
யாராவது இறந்தால்தான் இந்த ஆதாய அரசியலார் அரசியல் செய்ய முடிகின்றது
ஆபத்து பல நடந்தாலும் நடப்பவை நடந்தவையை மறக்க வைத்து விடுகின்றது!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment