Sunday, 23 January 2022

குருவிப் பாட்டு

 

குருவிப் பாட்டு 

உழைப்பை மட்டுமே நம்பி எம்போல் மனிதரும் உயிர்வாழ வேண்டும்                            இன்று இரை கிடைத்ததைப் போன்றே என்றும் கிடைக்க உழைக்க வேண்டும் 

பச்சிளங் குஞ்சுகளை காப்பதைப் போல் பள்ளி மாணவிகளைக் காக்க வேண்டும்      மதம் பார்த்து உயிர்களை மதிக்கும்  மனநிலை முற்றிலும் மாற வேண்டும் 

பத்து மூட்டை விளைந்த நிலத்தில்                    20 விளையும் நிலை தொடர வேண்டும்      கூட்டில் வாழும் யாம் பெற்ற வாழ்வை    வீட்டில் வாழும் யாவரும் பெற வேண்டும்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment