குடில்களின் அழகுத் தோற்றம்
குடியிருக்கும் மக்கள் குடில்களின் தோற்றம்
குடிகள் வாழும் மாடி வீடுகளின் தோற்றம்
முன் வீடு பின் வீடு என அன்றைய வாழ்க்கை
மேல் வீடு கீழ் வீடு என இன்றைய வாழ்க்கை
வாசல் கதவை திறந்து வைத்தே வாழ்ந்த நிலை அன்று
வாசல் கதவை பூட்டியே வைத்து வாழும் நிலை இன்று
குளிர் வர ஜன்னலைத் திறந்தே வைத்த நிலை அன்று
ஜன்னலைப் பூட்டினால்தான் குளிரும் நிலை இன்று
குடியிருந்த இடம் புனிதமாக இருந்து சிறந்தது அப்போது
மத வழிபாட்டுத் தலங்களில் முறைகேடு நடப்பது இப்போது
கூரை வீடானாலும் கோடி புண்ணியம் பெற்றது அப்போது
கோடியின் வீடானாலும் சிறு புண்ணியம் பெறுவது எப்போது?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment