Wednesday, 3 November 2021

காயும் கனியும் ஒன்றே

 

காயும் கனியும் ஒன்றே 

காயாக இருந்தால் கனியாவது இயல்பு கனிந்தக் கனியை பழமென்பதும்  இயல்பு

தேங்காய் தெங்கம் பழமாகவும் உள்ளது ஆப்பிளோ மாறாமல் அப்படியே உள்ளது

கடித்தால் காயாகத்தான் இருக்கின்றது சுவைத்தால் கனிபோல் இனிக்கின்றது

அமுக்கினாலும் அமுங்குவது இல்லை நுகர்ந்தாலும் மணப்பது இல்லை

பச்சிளம் பல்லால் கடித்ததால் குழந்தைக்கு சிரிப்பு ஆப்பிள் கடிப்பட்டதால் முகத்தில் பூரிப்பு

ஆப்பிளைக் கடிக்க ஆசையாய் இருக்கும் கடிக்கும் ஓசையும் மென்மையாய்  இருக்கும்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment