கையில் அடங்கியது உலகம்
உள்ளங்கை நெல்லிக்கனி அது வேறு
உள்ளத்தின் கைப்பணி இது வேறு
வெறுங் கையில் முழம் அது வேறு
நவீன நாகரிகத்தின் பலம் இது வேறு
கண்ணால் காண காட்சி வேண்டும்
விரல்தான் அதற்கு உதவிட வேண்டும்
நாடு விட்டு நாடு நொடியில் போகலாம்
ஒமிக்ரான் பரவலை உடனே அறியலாம்
சென்னை வெள்ளத்தை சொன்னால் எளிதில் புரியுமா?
கண் முன் காட்சியாகக் காட்டினால் எளிதில் புரியுமா?
கைப்பேசியை வைத்தே கைப்பேசியை தூற்றுவது சரியா?
அளவோடு கையாண்டு கைப்பேசியை போற்றாததும் சரியா?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment