Saturday, 27 November 2021

எங்கெங்கும் வேண்டும் கோவில்

 

எங்கெங்கும் வேண்டும் கோவில் 

எல்லாக் குடிகளுக்கும் முன் தோன்றிய              மூத்தக் குடி கட்டியக் கோவில்கள் பல                இக்கோவில்களைக் கண்டே மற்றைய              சமூகங்கள் கண்டன வழிகள் பல 

தான் சிறு குடிசையில் வாழ்ந்தாலும்                    கடவுளை கோபுரத்தில் வைத்தது என் வம்சம்  என் வம்சத்திடம் எவர் வாலை ஆட்டினாலும்    என் கடவுள் செய்திடுவார் எவரையும் தும்சம் 

மேள சத்தம் கேட்கட்டும் கோவிலெங்கும்        தேவையற்ற ஓசை ஓயட்டும் ஊரெங்கும்          நாட்டு அழுக்கை அகற்றட்டும் வெள்ளம்        இறைவன் அருளைப் பெறட்டும் உள்ளம்

கோயில் இல்லாத ஊரில் வாழ்ந்தால் தமிழ்ப்  பரம்பரைக்கு ஏற்படும் பெரும் இழுக்கு              கோயிலைக் குறை கூறி சுற்றித் திரிந்தால் தமிழர்ப் பண்பாடாட்டிற்கும் ஏற்படும் இழுக்கு!

- தஞ்சை த இராமநாதன் 

No comments:

Post a Comment