Saturday, 20 November 2021

அவையஞ்சாமை (அதிகாரம் 73)

 

அவையஞ்சாமை (அதிகாரம் 73)

எங்கு எதை எப்போது எப்படியென நன்கு அறிந்து துணிந்துப் பேசுக

சொல்லும் பொருளும் பிறழாது மற்றவர் விரும்பும் வகையில் பேசுக

சம்பந்தம் உள்ளப் பேச்சை சம்பந்தம் உள்ள இடத்தில் பேசுக

மரியாதை கொடுக்க வேண்டிய அளவில் கொடுத்து தரத்தோடுப் பேசுக

தேவையற்றப் பேச்சைத் தவிர்த்து உள் அமைதியுடன் இருக்கப் பழகுக

அறிவானவரின் தரத்தை அறிந்த பின் அவரிடம் பேசுவதற்குச் செல்க

பிழையற்றுப் பேசுவோர் புத்திக் கூர்மை உடையோர் என்பதை உணர்க

வீணான சவடால் பேச்சு வல்லவரிடத்தில் எடுபடாது என்பதை அறிக

நல்லறிஞர் அறிவு அற்ற மூடரிடம் எப்போதும் சேராரென்பதைப் புரிக

முட்டாளிடம் அறிவாளியின் பேச்சு அந்த சாக்கடையோடு நன்னீரெனத் தெளிக!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment