வீணான கோபம் ஒரு சாபம்
எப்போதும் கோபமேபடாதவர் மனிதருமில்லை
எப்போதுமே கோபப்படுபவர் மனிதருமில்லை
வீணான கோபத்தில் மனிதாபிமானம் இல்லை
கோபத்தின் வார்த்தைகளில் நியாயமும் இல்லை
கோபத்தின் பின்னணியில் அகங்காரம் உண்டு
கோபத்தின் பின்னணியில் ஆணவமும் உண்டு
எறிந்த அம்பைப் போல எறிந்த வார்த்தையால் காயப்படும்
சுட்ட வடு அன்பெனும் மருந்து கொண்டு ஆற்றுவதற்குப் பயன்படும்
மாற்றம் காண்போம் உறுதியான உண்மையுடன்
குற்றம் மறந்து சுற்றம் வளர்ப்போம் உறுதியுடன்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment