Sunday, 17 October 2021

வீணான கோபம் ஒரு சாபம்

 

வீணான கோபம் ஒரு சாபம்

எப்போதும் கோபமேபடாதவர் மனிதருமில்லை

எப்போதுமே கோபப்படுபவர் மனிதருமில்லை

வீணான கோபத்தில் மனிதாபிமானம் இல்லை 

கோபத்தின் வார்த்தைகளில் நியாயமும் இல்லை 

கோபத்தின் பின்னணியில் அகங்காரம் உண்டு 

கோபத்தின் பின்னணியில் ஆணவமும் உண்டு 

எறிந்த அம்பைப் போல எறிந்த வார்த்தையால் காயப்படும் 

சுட்ட வடு அன்பெனும் மருந்து கொண்டு ஆற்றுவதற்குப் பயன்படும் 

மாற்றம் காண்போம் உறுதியான உண்மையுடன்

குற்றம் மறந்து சுற்றம் வளர்ப்போம் உறுதியுடன்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment