ஏறுதழுவல் (ஜல்லிக் கட்டு)
தன்னால் பிடிக்க முடியாது என்று தெரிந்தும் பிடிக்க விரட்டும் காளையர்கள்
தன்னை பிடிக்க முடியாது என்று தெரிந்தும் பிடித்தபடி ஓடும் காளைகள்
ஓரமாய் ஒளிந்து நின்று கூட்டமாய் பாய்வார்கள் முரட்டுக் காளையர்கள்
ஒய்யாரமாய் நிமிர்ந்து நின்று கூட்டமாய் பாய்ந்தோடும் விரட்டுக் காளைகள்
முட்டப்பட்டு மோதப்பட்டு மிதிப்பட்டு தூக்கி எறியப்படுவர் காளையர்கள்
முடிந்து வைக்கப்பட்ட பண முடிச்சோடு எகிறித் தப்பியோடும் காளைகள்
காளையை வளர்த்து பண முடிப்போடு களத்தைக் கட்டுப்படுத்துவோர் யார்?
சொற்பப் பணத்திற்காக மாட்டை விரட்டி உயிரை விடவும் துணிந்தோர் யார்?
மாட்டை மடக்கிய மாவீரன்தான் அந்த ஊரின் கிராம பஞ்சாயத்துத் தலைவரா?
மஞ்சு விரட்டு வீரன்தான் ஒன்றியக் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றவரா?
பண்ணை வீட்டார் மாடுபிடி களத்தில் இறங்கி மாட்டைப் பிடிக்காதது ஏன்?
அரசியல்வாதி குடும்பத்தினருக்கு மாட்டை மடக்கிப் பிடிக்கப் பிடிக்காதது ஏன்?
உணர்வோடு தமிழர் பாரம்பரிய விளையாட்டை மறக்காமல் காப்போம்! அறிவோடு தன்மான ஏழைத் தமிழர் தன்னுயிரைத் துறக்காமல் காப்போம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment