புதியதோர் உலகம்
நடந்ததை என்றும் மறக்காமல் நடப்பதை இன்றும் மறக்காமல்
நல்லதை மனதில் நிறுத்தி நல்லதை செயலில் நிறுத்தி
புதியதோர் உலகம் செய்வோம்!
திறந்தவெளி கழிப்பிடம் நீங்கி அனைவரும் தங்க வீடு வாங்கி
இயற்கை தெய்வத்தை வணங்கி இல்லார்க்கு உணவை வழங்கி
புதியதோர் உலகம் செய்வோம்!
சாதி வெறி அறவே அகன்று சமத்துவம் நிலையாக நின்று
அகத் தூய்மை நிலை கொண்டு புறத் தூய்மை மாற்றம் கண்டு
புதியதோர் உலகம் செய்வோம்!
நிலம் நீர் காற்று தூய்மையாகி உடல் மனம் ஆன்மா புனிதமாகி
ஆன்மீகம் லௌகீகம் சமமாகி சமன்பட்ட வாழ்வு ஆனந்தமாகி
புதியதோர் உலகம் செய்வோம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment