வெயில் படர்ந்து வண்டியின் முன்னே ஒளியாய்த் தெரியுது
மழைத் தொடர்ந்து வண்டியின் பின்னே சாரளாய்த் தெரியுது
சீவிய கொம்புகள் காளைகளுக்கு சிறப்பைக் கொடுக்குது
பூசிய வண்ணங்கள் கொம்புகளுக்கு பொலிவைக் கொடுக்குது
மழைபட்ட மண்ணில் மண்ணின் வாசனை பெருகுது
மழைபடாத மண் மணம்பெற மழையின் வரவினை நோக்குது
லாடம் கட்டிய ஓசை காளையின் காலில் டக் டக்கெனக் கேட்குது
நனைய ஆசை இருந்தாலும் ஓட்டுநரின் இதயம் படக் படக்கென அடிக்குது!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment