Tuesday, 19 October 2021

வண்டியைத் தொடரும் மழை

 


வண்டியைத் தொடரும் மழை

வெயில் படர்ந்து வண்டியின் முன்னே ஒளியாய்த் தெரியுது

மழைத் தொடர்ந்து வண்டியின் பின்னே சாரளாய்த் தெரியுது

சீவிய கொம்புகள் காளைகளுக்கு சிறப்பைக் கொடுக்குது

பூசிய வண்ணங்கள் கொம்புகளுக்கு பொலிவைக் கொடுக்குது

மழைபட்ட மண்ணில் மண்ணின் வாசனை பெருகுது

மழைபடாத மண் மணம்பெற மழையின் வரவினை நோக்குது 

லாடம் கட்டிய ஓசை காளையின் காலில் டக் டக்கெனக் கேட்குது

நனைய ஆசை இருந்தாலும் ஓட்டுநரின் இதயம் படக் படக்கென அடிக்குது!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment