கொரோனாவும் ஊரடங்கும்
ஊரார் அடங்கினால் ஊரடங்கு தேவையில்லை
கொரோனா அடங்கினால் ஊரடங்க தேவையில்லை
ஊரார் அடங்கியதாக எப்போதும் வரலாறில்லை
கொரோனா அடங்குவதாக இப்போதும் தெரியவில்லை
தேர்தல் நேரத்தில் இந்த கொரோனாவுக்கு மதிப்பில்லை
தேர்தல் முடிந்ததும் சொந்த மக்களுக்கும் மதிப்பில்லை
கூடி வாழ்ந்தால் கோடிக் கணக்கில் நன்மை அன்று
கூடி நின்றாலே கோடிக் கணக்கில் தீமை இன்று
மருந்துகள் பல வந்தன கொரோனாவைத் தடுக்க
பிறழ்வாய் வந்தது கொரோனா அந்த மருந்தைத் தடுக்க
கட்டுப்பாடு வேண்டாம் என்பார் வாழ்வைக் கெடுக்க
கட்டுப்பாடு வேண்டும் என்போம் பேரழிவைத் தடுக்க!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment