நல்ல தலைமை நாடு காக்கும்
கூரையோடு குப்பை கூளங்களோடு சாலையோரம் பல்லாயிரம் வீடு
கண்டும் காணாதது போல் கடந்து செல்லும் தலைவர்களுக்கு மானக்கேடு
நெருப்பு கெடுக்கும் வெள்ளம் கெடுக்கும் பாம்பும் கடிக்கும் பூச்சியும் கடிக்கும்
பசியும் கொல்லும் பிணியும் கொல்லும் குளிரும் கொல்லும் சூடும் கொல்லும்
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி நொந்தக் குடி
வெட்டியாக கத்திப் பேசி சண்டை வளர்த்து சாதி வளர்க்கும் ஏமாந்தக் குடி
வருமுன் காத்தால் அது ஆட்சியாளரின் அறிவான ஆளுமைக்கு அழகு
வந்தபின் கை கொடுத்து பின் வராமல் தடுத்தால் அறிவுக் கூர்மைக்கு அழகு
உள்ளதைக் கொண்டு நல்லதை செய்ய முடியும் ஆறாவது அறிவு இருந்தால்
குடிசைகளையும் மாற்ற முடியும் லீ குவான் இயூ போன்ற தலைவன் இருந்தால்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment