Sunday, 10 October 2021

வயல் காட்டில் வசந்தம்

 

வயல் காட்டில் வசந்தம்

மலையடிவாரத்திலே வயல் காக்கும் வரப்பினிலே

காலைப் பொழுதினிலே காலார நடக்கயிலே

கதிரிவன் ஒளியினிலே கருநிழல் நீங்கயிலே

ஓடும் வாய்க்காலிலே சின்ன மீன் குதிக்கயிலே

வாழை இலையினிலே முத்தாக நீர் இருக்கயிலே

தென்னங் காற்றின் வீசலிலே நெற்பயிரின் ஆடலிலே

களையைப் பறிப்பதிலே கவனம் குறைவதில்லே

களைப்பும் தெரிவதில்லே மலைப்பும் தெரிவதில்லே!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment