வயல் காட்டில் வசந்தம்
மலையடிவாரத்திலே வயல் காக்கும் வரப்பினிலே
காலைப் பொழுதினிலே காலார நடக்கயிலே
கதிரிவன் ஒளியினிலே கருநிழல் நீங்கயிலே
ஓடும் வாய்க்காலிலே சின்ன மீன் குதிக்கயிலே
வாழை இலையினிலே முத்தாக நீர் இருக்கயிலே
தென்னங் காற்றின் வீசலிலே நெற்பயிரின் ஆடலிலே
களையைப் பறிப்பதிலே கவனம் குறைவதில்லே
களைப்பும் தெரிவதில்லே மலைப்பும் தெரிவதில்லே!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment