சிங்கம் சிங்கம்தான்
நிமிர்ந்த பார்வையும் மிரள வைக்கும் கம்பீரமும் இருந்தால்தான் சிங்கம்
திருட்டுப் பார்வையும் காரியவாத போக்கும் இருந்தால் அது அசிங்கம்
நேருக்கு நேராய் மோதத் தயங்காத நெஞ்சுரம் இருந்தால்தான் சிங்கம்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசித் திரிந்தால் அது அசிங்கம்
தலையே போனாலும் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து நின்றால்தான் சிங்கம்
தன்மானம் போய் தலை குனிந்து தரங்கெட்டு வாழ்ந்தால் அது அசிங்கம்
காட்டுக்கு ராஜா ராஜ நடைபோட்டு நடந்து சென்றால்தான் சிங்கம்
நாட்டுக்கு ராஜா எனக் கூவி ரவுடி நடை நடந்தால் அது அசிங்கம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment