யார் ஆசிரியர்?
பள்ளியில் ஆரம்பப் படிப்பைக் கற்பித்தால் ஆசிரியர்/ஆசிரியை
கல்லூரியில் படிப்பைக் கற்பித்தால் பேராசிரியர்/பேராசிரியை
ஆனால்,
நூலை எழுதியவர் எழுத்தாளர் ஆகாமல் நூலாசிரியர் ஆனதெப்படி?
நாவலை எழுதியவர் ஏதாவதாகாமல் நாவலாசிரியர் ஆனதெப்படி?
கதையை எழுதுவோர் கதையாளர் ஆகாமல் கதாசிரியர் ஆனதெப்படி?
பத்திரிக்கை நடத்தினால் நடத்துநர் என்றாகாமல் ஆசிரியர் ஆனதெப்படி?
எப்படியாயினும்,
நல்லாசிரியர் விருதை இவ்வாசிரியர் தட்டிப் பறிக்காமல் இருந்தால் போதும்!
பயிற்றுவிக்கும் ஆசிரியரை வாத்தியார் என ஏமாற்றாமல் இருந்தால் போதும்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment