காஞ்சிப் போகாத காஞ்சி நிலம்
காஞ்சி மரம் இருந்து காஞ்சி மலர் மலர்ந்து சிறந்த காஞ்சிபுரம்
காஞ்சி அணி அணிந்து காஞ்சிப் பாடல் புனைந்து சிறந்த காஞ்சிபுரம்
அரசியலின் ஆளுமைக்கு அச்சாணி இட்டது காஞ்சிபுரம்
பெரிய மனிதர்களுக்கும் ஆசீர்வாத மடமானதும் காஞ்சிபுரம்
கல்யாணப் பட்டென்றால் பட்டென மனதில் பதிந்தது காஞ்சிபுரம்
காமாட்சி அம்மனென்றால் காஞ்சிக் காமாட்சியென பதிந்ததும் காஞ்சிபுரம்
சங்கரமடம் என்றாலும் காமகோடி சங்கராச்சாரி என்றாலும் காஞ்சிபுரம்
கடமை கண்ணியம் என்றாலும் அறிஞர் அண்ணா என்றாலும் காஞ்சிபுரம்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment