அரிய பெரிய அரியலூர்
அரியலெனும் கள் பானம் பருகிக் களித்தப் பூமி
பானம் தரும் மரம் பல வளர்த்து நிலைத்தப் பூமி
அரிய வகை மீன் வகைகள் புதைப்படிவம் கிடைத்தப் பூமி
அரிய வகை டைனோசர் வகைகள் புதைப்படிவமும் கிடைத்தப் பூமி
அன்று பெரம்பலூரோடு சேர்ந்து ஒன்றாக இருந்த பூமி
பிரிந்து பின்பு சேர்ந்து பின்பு பிரிந்து இருக்கும் பூமி
சுண்ணாம்புக் கல்லை உள்ளகத்தே கொண்ட பூமி
சிமெண்ட் தொழிலை தன்னகத்தே கொண்ட பூமி
இராணுவத்தில் உயிர்த் தியாகம் செய்தோரைக் கொண்ட பூமி
வீரர் சிவசந்திரன் நினைவாக மணிமண்டபத்தைக் கண்ட பூமி
கம்பு சோளம் விளைச்சலில் செழிப்பைக் கண்ட பூமி
கங்கை கொண்ட சோழபுரத்தால் பெருமையைக் கொண்ட பூமி!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment