Saturday, 28 August 2021

யார் மனிதன்?

 

யார் மனிதன்?

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் பொய்யாக வாழ்பவன் மனிதனல்ல

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் மெய்யாக வாழ்பவர்தான் மனிதன்!

தனது மனைவி மட்டும் கண்ணகியாக வாழ வேண்டும் என்பவன் மனிதனல்ல

என்றென்றும் கேவலமான கோவலன் வாழ்வை வாழாதவர்தான் மனிதன்!

நன்றி மறந்து நாயைவிட மோசமான வாழ்வை வாழ்பவன் மனிதனல்ல

உயிரே போனாலும் உறவுக்காக நன்றி உணர்வோடு வாழ்பவர்தான் மனிதன்!

துரோகத்தை மறைக்க கோயில் உண்டியலை நிறைப்பவன் மனிதனல்ல

தெரியாத மனிதருக்கும் முடிந்த அளவு உதவி செய்பவர்தான் மனிதன்!

வெளியில் வேடமிட்டு பக்திமானாக நடிப்பவன் தரமான மனிதனல்ல

உள் மனதின் சுத்தத்தோடு சக்திமானாக வாழ்பவர்தான் தங்கமான மனிதன்!

கிடைத்த வாய்ப்பில் சுய நலத்துக்காக மட்டும் பணம் சேர்ப்பவன் மனிதனல்ல

கிடைத்த வாய்ப்பில் உயிர்கள் பொது நலத்திற்காக வாழ்பவர்தான் மனிதன்!

ஏமாற்றி மாளிகை வாகனமென மாயை வாழ்வை வாழ்பவன் மனிதனல்ல

நேர்வழியில் உழைத்து சிறு குடிசையில் வாழ்ந்தாலும் அவர்தான் மனிதன்!

ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூ சர்க்கரையாக வாழ்பவன் மனிதனல்ல

எல்லாம் இருக்கும் ஊரில் இனிக்கும் கரும்பாக வாழ்பவர்தான் மனிதன்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment