பழைய சோறு
இரவு சாப்பாட்டோடு சேர்த்து வடித்து இரவு முழுதும் நீரினுள் மூழ்கிய சோறு
காலைப் பொழுதில் மண் குண்டான் கஞ்சிக் கலயம் சேரும் சோறு
புளியால் பளிச்சிடும் வெண்கலக் கும்பாவில் நீரோடு நிறைந்த சோறு
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து தாத்தாக்கள் ருசித்து சாப்பிட்ட சோறு
நீர் மோரோடு ஒரு முறடு குடிக்க சேர்த்து ஒரு பிடி உள்ளே சென்ற சோறு
பச்சை மிளகாயோடு கல் உப்பைக் கடித்ததோடு வேகமாக செல்லும் சோறு
சின்ன வெங்காயக் கடியின் தனிச்சுவை விரைவாகக் கேட்டிடும் மேலும் சோறு
குளிரும் காரசார நாவோடு கண்ணில் நீர் வர பலம் கொடுத்த பழைய சோறு!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment