மரமேறிய காலம்
மரமேறி குதித்தக் காலம் வருமா? மல்லுக் கட்டிய காலமும் வருமா?
பல் தெரிய சிரித்தாக் காலம் வருமா? பகட்டு இல்லாது சிரித்தக் காலம் வருமா?
பணத்தால் பாகுபாடு இங்கில்லை; மனத்தால் வேறுபாடும் இங்கில்லை
வாடா போடா டேய் என்னடா உறவு; வாங்க போங்க சொல்லாத நல்லுறவு
காலம் ஓடும் வாழ்க்கையும் ஓடும்; மரத்தைப் பார்த்ததும் எண்ணமும் ஓடும்
ஓட்டம் ஓடினால் உடலும் வளரும்; வயது வளர்ந்தால் உடலும் தளரும்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment