Sunday, 15 August 2021

தாவரம் தா வரம்

 

தாவரம் தா வரம்

மேகம் மரங்களைப் பார்க்குது; மரம் மேகங்களைப் பார்க்குது

மழை இரண்டையும் சேர்க்குது; பூமி வளத்தால் சிறக்குது

பச்சையம் சூரியனைப் பார்க்குது; சூரியன் ஒளி கொடுத்து காக்குது

பூக்கள் காற்றால் அசையுது; காற்று பூக்களை இணைக்குது

பூக்களுக்காக இலைகள் உதிருது; பூத்ததும் இலைகள் துளிருது

நிழலால் மரத்தடி குளிருது; இயற்கையால் வாழ்வு மிளிருது!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment