தாவரம் தா வரம்
மேகம் மரங்களைப் பார்க்குது; மரம் மேகங்களைப் பார்க்குது
மழை இரண்டையும் சேர்க்குது; பூமி வளத்தால் சிறக்குது
பச்சையம் சூரியனைப் பார்க்குது; சூரியன் ஒளி கொடுத்து காக்குது
பூக்கள் காற்றால் அசையுது; காற்று பூக்களை இணைக்குது
பூக்களுக்காக இலைகள் உதிருது; பூத்ததும் இலைகள் துளிருது
நிழலால் மரத்தடி குளிருது; இயற்கையால் வாழ்வு மிளிருது!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment