மண்ணை மீட்ட மாவீரர்கள்
அடிமைத்தன அவமானத்தை அக்கிரம அவலத்தை அகற்றிய அற்புத வீரர்கள்
ஆண்டோரின் ஆணவ ஆட்சியின் ஆட்டத்தை ஆட்டி ஆடவைத்தத் தீரர்கள்
இந்தியாவின் இறையாண்மையை இன்னுயிர்க்கு இணையாக்கிய வீரர்கள்
உரிமை உணர்வோடு உடமையின் உரிமையோடு உறுதிமிகு தீரர்கள்
ஊர் ஊராய் ஊராரை ஊக்கப்படுத்தி ஊருக்கு ஊர் ஊடகமான வீரர்கள்
எங்கு எப்போது எப்படி எவ்வாறு என எண்ணி எழுச்சியை எழுப்பிய தீரர்கள்
ஏமாற்றி ஏமாளியாக்கி ஏழையாக்கிய ஏதிலாரை ஏதுமில்லாராக்கிய வீரர்கள்
ஒருமித்த ஒருமைப்பாட்டின் ஒரேயொரு ஒலியோசையில் ஒலித்தத் தீரர்கள்
ஓய்வின்றி ஓடோடி ஓங்கிய ஓங்கார ஓசையால் ஓடவிட்ட ஓரணி வீரர்கள்
அந்நியர் ஆளா இலட்சியம் ஈடேற உற்சாகத்தின் ஊற்றான தீரர்கள்
எல்லோரும் ஏற்கும்படி ஐயமிலா ஒற்றுமை ஓங்க ஔடதமான வீரர்கள்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment