Friday, 13 August 2021

நல்ல தை நல்லதை செய்யட்டும்

 நல்ல தை நல்லதை செய்யட்டும்

ஐந்து ஐநூறு இருபத்தைந்து நூறு                        இதை வைத்து பொங்கல் கூறுவதா கூறு?

ஆடியில் தண்ணி திறந்தும் பஞ்சமா?                அணை நிரம்பினாலும் அதே பஞ்சமா?

கொடுத்து ஏழை ஆக்குகின்றாரா?                      பெறுவதால் ஏழை ஆகின்றாரா?

அன்று பொன் விளைந்த பூமி                                இன்று வளம் இழந்த பூமியா?

இல்லாருக்கு இருப்போர் கொடுப்பர்                  பொங்கலைப் பொங்கித் திளைப்பர்

அரசு கொடுப்பாராக இருப்பது பொது நலம்      மருத்துவம் இலவசமானால் புது நலம்

எல்லோரும் பெறட்டும் அடிப்படை வளம்            வறுமையைப் போக்கட்டும் வளமான நிலம்

தை பிறந்ததும் நல்ல வழி பிறக்கட்டும் இல்லாமை இனி இல்லாமல் போகட்டும்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment