Tuesday, 10 August 2021

கொரோனா தந்தப் பாடம்

 

கொரோனா தந்தப் பாடம்

மனிதனின் பேராசையும் குறையவில்லை காமக் கொடூரமும் குறையவில்லை

குறுக்கு வழியில் பணத்தைக் குவித்தான் பாவத்தையும் சேர்த்துக் குவித்தான் 

நல்லோரால் எல்லோரும் பெறுவது மழை பொல்லாரால் நல்லாரும் சாகுவது நிலை

இயற்கையை வென்றாரும் இங்கில்லை எவரும் இதற்கு விதி விலக்கில்லை

வாயோடு மூக்கையும் மூட வைத்தார்                  யாவரும் சமமென ஓட வைத்தார்

தங்கத்தில் கழிவறை கட்டியவன் உண்டு தங்கத்தில் முகக் கவசம் சூட்டியவன்  உண்டா?

அதிபர் இறந்ததும் ஆங்காங்கே          அனாதை இறந்ததும் ஆங்காங்கே

எங்கும் இருப்பவன் இறைவனென்றால் கொரோனாவில் இருந்தது யார்?

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment