கொரோனா தந்தப் பாடம்
மனிதனின் பேராசையும் குறையவில்லை காமக் கொடூரமும் குறையவில்லை
குறுக்கு வழியில் பணத்தைக் குவித்தான் பாவத்தையும் சேர்த்துக் குவித்தான்
நல்லோரால் எல்லோரும் பெறுவது மழை பொல்லாரால் நல்லாரும் சாகுவது நிலை
இயற்கையை வென்றாரும் இங்கில்லை எவரும் இதற்கு விதி விலக்கில்லை
வாயோடு மூக்கையும் மூட வைத்தார் யாவரும் சமமென ஓட வைத்தார்
தங்கத்தில் கழிவறை கட்டியவன் உண்டு தங்கத்தில் முகக் கவசம் சூட்டியவன் உண்டா?
அதிபர் இறந்ததும் ஆங்காங்கே அனாதை இறந்ததும் ஆங்காங்கே
எங்கும் இருப்பவன் இறைவனென்றால் கொரோனாவில் இருந்தது யார்?
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment