மனித இனம் தோன்றிய முதல்
பரிணாமத்தின் பரிமாணத்தை அறிய பழங்குடியினரின் வாழ்வைப் பாரீர்
கிடைத்ததை உண்டு கிடைத்திடும் என்ற நம்பிக்கையின் வாழ்வைப் பாரீர்
அரைகுறை உடையோடு இரு பாலரின் ஒன்றுபட்ட அன்பைப் பாரீர்
அடைபட்ட அறை வாழ்வைவிட விடுபட்ட நிறை வாழ்வைப் பாரீர்
எங்கிருந்தாலும் அங்கிருந்து வந்த நம் எளிய வாழ்வியலைப் பாரீர்
மூத்தக்குடியாம் தமிழ்க்குடி மரபின் பழங்குடி வாழ்வியலைப் பாரீர்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment