பொலிவுடன் புதுமை வருக
இன்று இல்லாது ஒன்றும் இல்லை அன்று இல்லாது இன்றும் இல்லை
நாற்று இல்லாது நடவும் இல்லை காற்று இல்லாது கடலும் இல்லை
கற்றதின் மூலம் பெற்றதும் அதிகம் பெற்றதின் மூலம் கற்றதும் அதிகம்
கண்டதை விட காண்பதும் அதிகம் உண்டதை விட உண்பதும் அதிகம்
வயதும் மாறும் வருடமும் மாறும் உடலும் மாறும் உருவமும் மாறும்
மொட்டு மாறி பூவும் மாறும் மெட்டு மாறி பாட்டும் மாறும்
ஏழ்மை அகன்று ஏற்றம் வருக அகந்தை அகன்று ஆனந்தம் வருக
நோயற்ற வாழ்வே வருக வருக வறுமையற்ற உலகே வருக வருக!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment