வாழ்க்கைச் சக்கரம்
கவலை இல்லா வாழ்க்கை இருந்தது எப்போது?
அது அப்போது...
காலணி இல்லா வாழ்க்கை இருந்தது எப்போது?
அது அப்போது...
இயற்கைக் காற்றை முழுமையாய் சுவாசித்தது எப்போது?
அது அப்போது...
முள் குத்தி காலில் இரத்தம் வந்தது எப்போது?
அது அப்போது...
சாப்பாட்டை மறந்து விளையாடியது எப்போது?
அது அப்போது...
மிட்டாயை உடைத்தோ கடித்தோ பகிர்ந்தது எப்போது?
அது அப்போது...
உண்மையில் மகிழ்வான வாழ்வை வாழ்ந்தது எப்போது?
அது அப்போது...
இவ் வாழ்க்கையை மீண்டும் பெறுவது எப்போது?
அது எப்போது...?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment