அலைகள் சற்றும் ஓய்வதாகவும் இல்லை ஆசைகள் முற்றும் ஓய்ந்ததாகவும் இல்லை
அலைகளில் உப்பு குறைவாகவும் இல்லை ஆசைகளில் அன்பு நிறைவாகவும் இல்லை
அலையால் இன்பம் இல்லாமலும் இல்லை ஆசையால் துன்பம் இல்லாமலும் இல்லை
சீறும் அலை தந்துவிடும் நிலத்தில் சீரழிவை பேராசைத் தந்துவிடும் இனத்தில் பேரழிவை!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment