சாலையோர தேநீர் கடை
தாமிர பாத்திரத்தில் தேநீராக மாற நீர் குதித்துக் கொண்டே இருக்கும்!அலுமினிய பாத்திரத்தில் பால் கொதித்துக் கொண்டே இருக்கும்!
கொதிக்கும் போதே வெண்ணிற ஆடையை பால் சூட்டிக் கொள்ளும்!வடிகட்டிப் பையை சாயா நிறத்திற்கு தேயிலை மாற்றிக் கொள்ளும்!
அனைத்தையும் சேர்த்து தூக்கி ஆத்தினால் நுரை உயர்ந்து சிறக்கும்!நின்றபடியே கண்ணாடி குவளையில் தேநீர் குடித்தால் தூக்கம் பறக்கும்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment