இயற்கையானக் குரல்
ஆயிரம் நிலவோடு ஆரம்பித்தப் பாடல் கோடி நினைவோடு முடிந்தப் பாடல்
துள்ளித் துள்ளி ஆடவும் பாடல் ஆன்மிகத்தோடு இறைக்கும் பாடல்
மாயமான வாழ்வை உணரப் பாடல் உயரிய உழைப்பை அறியப் பாடல்
கம்பீரத்தில் கர்ஜித்த வீரப் பாடல் கண்ணீரைப் பெருக்கிய சோகப் பாடல்
காதல் செய்யாமலே காதலிக்கவும் பாடல் காதலைச் செய்ய தூண்டவும் பாடல்
தூங்காமலும் தூங்கி விழாமலும் இருக்கப் பாடல் தூங்கி விழித்தப் பின் தூங்கவும் பாடல்
மழைத் துளிகள் முகமானப் பாடல் தண்ணீரினுள் வியர்க்கவும் பாடல்
மூச்சு விடாமல் முடிக்கவும் பாடல் மூச்சு விட்டப் பிறகும் கேட்கும் பாடல்
சும்மாக் கிழித்த கடைசிக் குரல் அண்ணாத்தையில் ஒலித்தக் குரல்!
இயற்கைக்காக இயற்கையானக் குரல் இயற்கையோடு இயற்கையானக் குரல்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment