இன்றைய விவசாயமும் விவகாரமும்
விவசாயம் என்றால் லாபம் இல்லா தொழிலா?
விவசாயி என்றால் வசதி இல்லா நபரா?
விவசாயம் என்றால் தரம் தாழ்ந்த தொழிலா?
விவசாயி என்றால் விவரம் இல்லா நபரா?
பதில்: இல்லவே இல்லை
விவசாயம் என்றால் ஏழைகளின் தொழிலா?
விவசாயி என்றால் தினமும் 8 மணி நேரம் உழைப்பவரா?
விவசாயம் என்றால் வானம் பார்த்த பூமியின் தொழிலா?
விவசாயி என்றால் வறுமையில் வாடும் நபரா?
பதில்: இல்லவே இல்லை
விவசாயம் என்றால் இயற்கை முறை தொழிலா?
விவசாயி என்றால் பயிர்க் கடனை திருப்பி கட்டுபவரா?
விவசாயம் என்றால் இயந்திர மயம் ஆகாதத் தொழிலா?
தான் உண்டு வேலை உண்டு என வாழ்பவரா விவசாயி?
பதில்: இல்லவே இல்லை
விவசாயம்தான் உலகில் நிரந்தரமான தொழிலா?
விவசாயிதான் பசியின்றி வாழப் போகும் நபரா?
விசாயம்தான் நிரந்தரமான வருமானம் தரும் தொழிலா?
விவசாயிதான் நிம்மதியுடன் தூங்கி எழப்போகும் நபரா?
பதில்: ஆமாம் ஆமாம்
ஆம் ஆமாகவே இருக்க வேண்டும்!
ஆமை இல்லை என்பதும் மாற வேண்டும்!
பசியில்லா நிலை பாரினில் நிலைக்க வேண்டும்!
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் நிலை தொடர வேண்டும்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment