நாயை நடுத் திண்ணைவரை விடாது ஓரத்தில் ஒதுக்கி விடுதலே சரி
பண்பற்றவனை பக்கத்தில் விடாது தூரத்தில் துரத்தி விடுதலே சரி
இலக்கியத்திற்காக இலக்கணம் இருக்கின்றது அன்றும் இன்றும்
கலக்குவதற்காக கவிக்குணம் இருக்கின்றது இன்றும் என்றும்
பொய்யாய்ப் புகழும் பொய்யாலே பொருளும் கண்டோன் கெடுவோன்
அருகம்புல் எருக்கம்பூ தத்துவம் தெரிந்தோன் கவலை மறந்தோன்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment