உளமார உறுதிமொழி
எல்லோராலும் உளமாரவென உறுதிமொழி எடுக்க முடியுமா?
முடியும்...
ஏனெனில் கடவுளை நம்பாதவருக்கு
உளமாரத்தான் ஒரே துணை
எல்லோராலும் கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுக்க முடியுமா?
முடியாது...
ஏனெனில் உள்ளத்தையே ஏமாற்றுவோருக்கு
கடவுளின் கருணை கிடைக்குமா?
உளமார உறுதி எடுத்தோருக்கு கடவுள் நல்வழி காட்டட்டும்
கடவுளின் பெயரில் எடுத்தோருக்கு உள்ளம் மெய்வழியில் போகட்டும்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment