வாக்களித்தல்
வாக்களிப்பில் வாக்களித்துத் தெளிவோடு தேர்ந்தெடுத்து
உரிமையை உறுதிப்படுத்து
படிப்போடு பண்பட்டவரை
நெறியோடு நேர்மையானவரை
வரவழைத்திடு கூடுமானவரை
உரிமையைக் காத்திடுவாருக்கு
உணர்வை மதித்திடுவாருக்கு
மதியுடையாருக்கு வாய்ப்புக் கொடு
வாக்கை செலவிற்காக அழிக்காது
உம் செல்வாக்கிற்காக அளித்தால் வளத்தோடு வாழ்ந்திடும் தமிழ்நாடு!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment