எளிமை இனிமை முழுமை (999 - 1000)
மலர் விரிந்து மணம் தவழ்வதுபோல்
முகம் மலர்ந்து சுதந்திரமாக நகைத்தாலும்
மனம் திறந்து வெளிப்படையாக அழுது நமது கண்ணீரை உதிர்க்க முடியுமா?
எழுத்தாக சிரிப்பாக உள்ளுணர்வை வெளிப்படுத்த முடிந்த நமக்கு
ஆழ்மனதின் அமைதிக் குரலை எப்போதாவது ஒலிக்க முடியுமா?
எதிலும் எளிமை கண்டு
கண்மூடி மாபெரும் காட்சி கண்டு
ஆனந்தத்தில் திளைத்தால்
தித்திக்காதா நமக்கு?
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment