ஊழ்வினை எதிர்த்து வெல்
உடல் மனம் ஆன்மா மூன்றையும் தன்னுள் அடக்கி ஆள்வது ஊழ்வினை
உடலழகில் மயங்கும் மனம் ஆன்மாவை மறந்து வீழ்வதும் ஊழ்வினை
கோவலன் கேவலமாக மனம் ஓடியபடி ஆடி வாடி இறந்தது ஊழ்வினை
பிரிந்தோடிய கணவனுக்காக ஓடோடி மதுரையை எரித்ததும் ஊழ்வினை
தட்டுத் தடுமாறி ஆண்டவர்களை ஆண்டவனை விட துதிப்பது ஊழ்வினை
ராஜராஜனின் தனிச்சிறப்பை மறைத்து நரிபோல் ஊழையிடுவதும் ஊழ்வினை
ஊழ்வினையை எதிர்த்து வெல்வது ஊழ்வினையினுள் உள்ள ஊழ்வினை
ஊழ்வினையைத் தவிர்த்து வாழ்ந்திட பெற்றிடு ஆன்மிக குருவின் அருளினை!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment