கூனுதல் அகற்று
கூனிக் குறுகி கூழைக் கும்பிடு போடுவோரைப்
பக்கத்தில் அண்ட விடாது நாயைப் போல் விரட்டி விடாததால்
சுற்றி வந்து காலை வாரி விட்டு மாலை போட காத்திருப்போர்தான் கூனி நிமிரும் சகுனிகள்
பணத்திற்காகவும் பதவிக்காகவும் தன்மானத்தை இழந்து
தமிழினத்தின் தனிக் குணத்தையும் இழப்போர்
கேடு கெட்ட பிறவியில் பிறந்து மரபணுவில் மாற்றம் பெற்றவர்கள்
ஆனால்,
மூப்படைந்து முதுகு வளைந்த முதியோரின் காலைத் தொட்டு வணங்குவோம்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment