சிரித்தாலும் கண்ணீர் கரிக்கும்
துயரம் தாங்காத கண்ணைத் தூங்க விடாது சோகம்
தூக்கம் தங்காத கண்ணில் தங்கித் தாக்கிடும் சோகம்
தூக்கக் குறைவால் சோர்ந்துபோன கண்ணில் சேர்ந்திடும் சோகம்
சோகம் நிறைந்த மனதால் கண்ணில் கண்ணீர் சுரந்திடும்
சுமையைச் சுமக்க முடியாத கண்ணில் கண்ணீர் இறங்கிடும்
கன்னம் நனைத்து நாவில் கலந்தால் கண்ணீர் கரித்திடும்
சிரித்தால் கண்ணை விட்டு அகலும் கண்ணீரோ கொஞ்சம்
சிரித்ததால் கொஞ்சமாக அகன்றாலும் உப்புக் கண்ணீரே கொஞ்சும்
அழுவதால் கண்ணை விட்டு அகலும் கண்ணீரே விஞ்சும்
அழுகையால் விஞ்சியபடி அகன்றதும் வறண்ட கண்ணே மிஞ்சும்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment